sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்

/

தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்

தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்

தார் சாலை கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டம்


ADDED : அக் 31, 2025 02:32 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: தார் சாலை அமைக்க வலியுறுத்தி சொக்கனந்தல் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலத்தில் இருந்து சாத்தனந்தல், களத்தம்பட்டு, மல்லாண்டி, மேல்புதுப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மேல்மலையனுார் செல்லும் தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இதன் பிறகு சாலை புதுப்பிக்கப்பட வில்லை. இதனால் தார் சாலை முழுவதும் சேதமாகி மண் சாலையாகி விட்டது.

மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செஞ்சி, மேல்மலையனுாருக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக செஞ்சிக்கு விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர்.

சாலை பழுதானதால் இந்த வழியில் அவசரத்திற்கு ஆம்புலன்சுகளும் செல்ல முடிவதில்லை. இது குறித்து பொது மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சொக்கனந்தல் கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us