/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
/
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
ADDED : நவ 10, 2025 11:15 PM

விழுப்புரம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி இருளர் சமுதாய மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த சின்னகரம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பொதுமக் கள் கூறுகையில், எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் வேறு சமுகத்தினர் ஒரே இரவில் சிவலிங்கத்தை வைத்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால், எங்களுக்கு கொடுத்த இடத்தில் குடியேற முடியாத நிலை உள்ளது. வருவாய் துறையால் எங்களுக்கு இடம் அளந்து கொடுக்காமல் உள்ளது.
இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், அளந்து கொடுக்கவும் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, அளவீடு செய்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, போலீசாரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

