ADDED : செப் 22, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை :மேல்மலையனுாரில் பிக்பாக்கெட் அடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கருத்துவாபாடி கிராமத்தை சேர்ந்த குமார் மகன் ஆனந்தன் , 37 என்பவர் சுவாமி தரிசனம் செய்தார்.
அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த 5,400 ரூபாயை மர்ம நபர் திருடி யுள்ளார். அங்கிருந்த மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்னர். விசாரித்த தில் பிடிபட்ட நபர் ஆரணியை சேர்ந்த செல்வராசு, 54 என தெரிய வந்தது.
மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து செல்வராசுவை கைது செய்தனர்.