/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை தவறவிட்ட ஏழை மாணவி பரிதவிப்பு
/
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை தவறவிட்ட ஏழை மாணவி பரிதவிப்பு
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை தவறவிட்ட ஏழை மாணவி பரிதவிப்பு
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை தவறவிட்ட ஏழை மாணவி பரிதவிப்பு
ADDED : செப் 02, 2025 03:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளியளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி, 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீடு இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை விட்டு தவித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த அத்தியூர் திருக்கையை் சேர்ந்தவர் அய்யனார். கூலித் தொழிலாளி. இவரது மகள் வினிதா. அதே கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
இன்ஜினியரிங் படிப்பதற்காக, அண்ணா பல்கலைக் கழக சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பிரிவில் சேர்ந்து படிக்க முயன்ற நிலையில், கவுன்சிலிங்கின்போது, தனியார் இ- - சேவை மையத்தில் தவறான சாய்சை அளித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடில் வாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்.
இது குறித்து, மாணவி வினிதா கூறியதாவது:
அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலை பள்ளியில் படித்து, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, 600க்கு 521 மதிப்பெண் எடுத்தேன். இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்திருந்தேன்.
1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடில் படிக்க விரும்பி கவுன்சிலிங்கில் பங்கேற்றேன்.
முதலில், விழுப்புரம் அருகே ஒரு தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சீட் கிடைத்தது. என்னால் தினசரி கல்லுாரிக்குச் சென்று செலவு செய்து படிக்க முடியாது என்பதை உணர்ந்து, அந்த சேர்க்கையை நாங்கள் ஏற்காமல், தங்கும் விடுதியுடன் கூடிய கல்லுரியில் படிப்பதற்காக அடுத்த கவுன்சிலிங்கிற்கு முயற்சித்தோம்.
இதற்காக தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று, மீண்டும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோம்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பிக்க நான் சொன்னதை கவனிக்காமல், தவறுதலாக பொது பிரிவு சேர்க்கை பிரிவில் விண்ணப்பித்து விட்டனர்.
இதனால், எனக்கு சேலம் பாரதியார் மகளிர் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஆனால், எனது பெற்றோர் சென்னையில் கூலி செய்வதால், சேலத்தில் தங்கி படிக்க முடி யாத சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், ஓராண்டு படிப்பு வீணாகிவிடும் என நினைத்து, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சேர்த்தனர். தொடர்ந்து கடன் வாங்கி படிக்க வைக்க முடியாது என்பதால், எனது பெற்றோர் என்னை படிக்க வேண்டாம் என நிறுத்தி விட்டனர்.
இதனால், எனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடில், ஏதேனும் ஒரு விடுதியுடன் கூடிய கல்லுாரியில் சேர்க்கை வழங்கி, எனது இன்ஜினியரிங் கனவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவி வினிதா கூறினார்.