/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 29, 2025 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரூராட்சி பணியாளர்கள் சார்பில் நடந்த பேரணியை, செயல் அலுவலர் ஷேக்லத்தீப் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பணியாளர்கள் கடை வீதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு முக்கியத்துவம் குறித்து கோஷம் எழுப்பியபடி சென்றனர். பேரணியில் சென்றவர்கள், கடைகளில் பிளாஸ்டிக் பதிலாக மஞ்சள் பை வினியோகித்தும் பிரச்சாரம் செய்தனர்.