sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்

/

பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்

பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்

பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்


ADDED : ஜூன் 25, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : பி.எம்., கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள், வரும் 30ம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

விழுப்புரம்மாவட்டத்தில் பி.எம்., கிசான் ஊக்கத் தொகை பெறும் 89,958 விவசாயிகளில், 65,336 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 24,622 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களுடன் வேளாண் துறை அலுவலர்களையோ, அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்புகொண்டு உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். வரும் 30ம் தேதிக்குள் பி.எம்., கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தனி அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறது.

இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 19 தவணைகளாக பி.எம்., கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us