/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : செப் 20, 2024 09:57 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மருதுபாண்டியன், 22; இவர், 17 வயது சிறுமியிடம், கடந்த ஓராண்டாக காதலித்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 18ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், மருதுபாண்டியன் மீது, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.