/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாக்குபோட்டு இறந்த நபர் போலீசார் விசாரணை
/
துாக்குபோட்டு இறந்த நபர் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 26, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தெற்கு ரயில்வே காலனியில் மரத்தில் துாக்கு போட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியில், 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மரத்தில் துாக்கு போட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.