/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
ADDED : நவ 28, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கம்: கண்டமங்கலம் அருகே காணாமல்போன இளம்பெண் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் சுவேதா,22; இவர் வில்லியனுாரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.
கடந்த 22ம் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பெண்ணின் தாயார் சித்ரா தனது மகளை தனியார் பஸ் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என புகார் செய்தார்.
இதன் பேரில்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.