ADDED : டிச 08, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் கே.கே.ரோடு, கணபதி நகரைச் சேர்ந்தவர் ஷபி, 47; இவரது மகள் ரஷிதாபேகம், 20; இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த ரஷிதாபேகம் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
கடந்த 2ம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததால் அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இதனால், விரக்தியடைந்த ரஷிதாபேகம் தான் சாப்பிட்டு வந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

