ADDED : நவ 08, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த எம்.குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகள் காவ்யா, 24; எம்.டெக்., முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவர், கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.