sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உறவினர் போல் நடித்து திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

/

உறவினர் போல் நடித்து திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

உறவினர் போல் நடித்து திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

உறவினர் போல் நடித்து திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை


ADDED : ஏப் 15, 2025 04:39 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உறவினர்போல் நடித்து, வீட்டிலிருந்த நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கண்டியமடை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் லட்சுமணன், 26; ஜே.சி.பி., டிரைவர். இவரது அண்ணன் புஷ்பராஜ், 30; என்பவருக்கு, கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது.

குடும்பத்தினர், திருமணத்திற்கு சென்றுவிட்டனர். லட்சுமணன் வீட்டில் உறவினர்கள் தனலட்சுமி, 65; மூதாட்டி தனம்மாள், 75; மட்டும் இருந்தனர்.

அப்போது, வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், உறவினர் என கூறி அறிமுகமாகி வீட்டிற்குள் சென்றார். வீட்டிலிருந்த தனலட்சுமி, மூதாட்டி தனம்மாளிடம் பேச்சு கொடுத்து கொண்டே, வீட்டின் பீரோவை திறந்து, அதிலிருந்த 2 சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றார்.

லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, நூதன முறையில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us