sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மினி பஸ் இயக்குவதில் தகராறு விழுப்புரத்தில் போலீஸ் எச்சரிக்கை

/

மினி பஸ் இயக்குவதில் தகராறு விழுப்புரத்தில் போலீஸ் எச்சரிக்கை

மினி பஸ் இயக்குவதில் தகராறு விழுப்புரத்தில் போலீஸ் எச்சரிக்கை

மினி பஸ் இயக்குவதில் தகராறு விழுப்புரத்தில் போலீஸ் எச்சரிக்கை


ADDED : செப் 22, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 22, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதை சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஜானகிபுரம், கண்டமானடி, கொளத்துார் வழியாக அரசமங்கலம் பகுதிக்கும், அதே போல், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து ஜானகிபுரம், கண்டமானடி, அரியலுார், சித்தாத்துார், அத்தியூர் வழியாக பேரங்கியூர் பகுதிக்கும் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடங்களில் அனுமதி பெற்ற மினி பஸ் உரிமையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக மினி பஸ்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டமானடி செல்ல இருந்த ஒரு மினி பஸ்சை, மற்றொரு மினி பஸ்சின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், புதிய வழித்தடங்களில் இயக்குவதற்கான மினி பஸ், புதிய பஸ் நிலையத்திலிருந்து தான் இயக்க வேண்டும்.

ஆனால், விதிமீறி பழைய பஸ் நிலையத்தில் வந்து டைம் எடுத்துச் செல்வதால், பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அனுமதி பெற்றுள்ள தங்களுக்கு பயணிகள் கூட்டம் வருவது பாதிக்கிறது.

அதேபோல் போல், ரூட்டை மாற்றி, மாற்று தடங்களில் பஸ்சை இயக்குகின்றனர் என்றனர்.

பஸ் இயக்குவதில் பி ரச்னை இருந்தால், வட்டார போக்குவரத்து துறையிடம் தான் முறையிட வேண்டும். தேவையின்றி பஸ்சை மறித்து தகராறு செய்வது, பயணிகளை இறக்கி விடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us