
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் 3.00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி ஆகிய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து, மூலவர் மற்றும் நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.