ADDED : செப் 12, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம், ரோஷணை பகுதியில், நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் மின்அழுத்தம் காரணமாக, அப்பகுதி வீடுகளில் இருந்த 'டிவி', மிக்சி உள்ளிட்ட மின் சாத னங்கள் பழுதடைந்தன.
இதுகுறித்து மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்துறையின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மாலை 6:00 மணியளவில் வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின்சாதனங்கள் பழுதடைந்த பகுதியிலுள்ள மின்சார ஒயர்களை மாற்றுவதாகவும், அந்தப்பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
அதனைத் தொடர்ந்த, 6:30 மணியளவில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.