/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 22, 2025 08:56 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சரவணபாண்டியன் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் சதாசிவம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலர் நெடுமாறன் சிறப்புரையாற்றினாார். உமாசந்திரன் நன்றி கூறினார்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மோசடியான மருத்துவ காப்பீடு திட்டத்தை சீர்படுத்த வேண்டும், மத்திய அரசை போல் 80 வயது துவக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.