/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மே 10, 2025 12:34 AM

செஞ்சி: செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பி.டி.ஓ.க்கள் நடராஜன், பிரபா சங்கர், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, செயலாளர் அய்யனார் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
துணை பி.டி.ஓ., பழனி நன்றி கூறினார்.