/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்
/
விவசாயிகளுக்கு உதவி அமைச்சர் வழங்கல்
ADDED : ஆக 21, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் 21 பயனாளிகளுக்கு , காய்கறி பயிர் நாற்றாங்கால், குழித்தட்டு, விலங்கு விரட்டிகள், நெல்விதை கருவி, நெல் விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

