ADDED : டிச 31, 2025 04:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார், ஐவெளி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மூன்று இடங்களிலும் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஐவெளியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இனைச்செயலாளர் புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வானுார் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் பங்கேற்றனர்..
வானுாரில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, வானுார் மத்திய ஒன்றிய செயலாளர் மைதிலி ராஜேந்திரன் பங்கேற்றனர்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த விழாவில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, ஒன்றிய செயலாளர் பி.கே.டி. முரளி, ஒன்றிய சேர்மன் உஷா முரளி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன்.
ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிவா, மாவட்ட கவுன்சிலர் கவுதம், ஒன்றிய பொறுப்புக்குழு பாலு, முத்துவேல், சங்கர், ரத்தினவேல், எத்திராஜ், ஏழுமலை, செல்வி, சம்பத்.
மாவட்ட சார்பணி ராமதாஸ், தேவேந்திரன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், செந்தமிழ்ச்செல்வன், மூர்த்தி, அன்பு, சரஸ்வதி ஜெயக்குமார், லட்சுமி குருவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், விஜயலட்சுமி நாகராஜ், அருண், கிளை செயலாளர்கள் ராமதாஸ், ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

