ADDED : ஜூன் 14, 2025 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் ;  கண்டமங்கலம் ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி புதிய பி.டி.ஓ., வாக கண்ணன் பொறுப்பேற்றார்.
கண்டமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த வெங்கடசுப்ரமணியன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக மேல்மலையனுார் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., வாக (தணிக்கை)  பணியாற்றி வந்த கண்ணன், பதவி உயர்வு பெற்று, கண்டமங்கலம் ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

