/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஆக 02, 2025 07:48 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
நகர இளைஞரணி சார்பில், செஞ்சி ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். நகர அமைப்பாளர் சத்தீஷ் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு முன்னிலை வகித்தனர்.
பேச்சாளர்கள் கோபி, முல்லை வேந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினர்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ்.
ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, நகர பொருளாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் கவுதமன், விளையாட்டு அணி நிர்வாகிகள் சந்திரன், ராஜா, கவுன்சிலர்கள் நந்தகுமார், பரணிதரன், லதா சாரங்கபாணி, அரும்பு குணசேகர், பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.