/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : அக் 01, 2024 07:16 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வெள்ளக்குளத்தில் சாலை பணியின் போது குடிநீர் பைப் லைனை சேதப்படுத்தியதை சரி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
மரக்காணம் அடுத்த வெள்ளக்குளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நான்கு வழிச் சாலை பணிக்காக சாலையின் இருபுறமும் அகலப்படுத்த பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப்லைன் சேதமானது. இதனால் கடந்த 3 நாட்களாக வெள்ளக்குளம் பகுதியில் குடிநீர் வினியோகம் பாதித்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 7:00 மணிக்கு திண்டிவனம் - மரக்காணம் சாலை வெள்ளக்குளம் பஸ் நிறுத்தம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் புதிய பைப் லைன் போட்டு குடி நீர் சப்ளை செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் 8:00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.