/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 10, 2026 04:30 AM

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் பொன்முடி எம்.எல்.ஏ., மீதான குவாரி வழக்கு விசாரணை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, விதிமீறி அதிகளவில் செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயச்சந் திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் நேரில் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

