
முதல் பரிசு ரங்கேலி பிரிவு, கோலப்போட்டியில் பங்கேற்றேன். 3டி மாடலில் காய்கறி, பழங்கள் மூலம் கோலம் போட்டேன். முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தினமலரின் கோலப்போட்டி திருவிழா போன்று உள்ளது. வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் தினமலர் நிர்வாகத்திற்கு போட்டியில் பங்கேற்ற அனைவரின் சார்பாக நன்றி.
-சசிகலா, விழுப்புரம். இரண்டாம் பரிசு தினமலர் கோலப்போட்டியில் இரண்டாவது ஆண்டாக பங்கேற்றேன். பரிசு கிடைத்தது சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தேர்வு செய்த கோலங்களுக்கு மட்டுமின்றி, போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் ஏமாற்றம் இல்லாமல் அனைவருக்கும் பரிசு வழங்கியதற்கு நன்றி.
-ஜெயந்தி, விழுப்புரம். மூன்றாம் பரிசு முதல் முறையாக கோலப்போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு வென்றுள்ளேன். அடுத்த முறை இதைவிட சிறப்பாக கோலம்போட்டு முதல் பரிசு பெறுவேன். தினமலருக்கு நன்றி.
-சரண்யா, விழுப்புரம்.

