ADDED : பிப் 17, 2024 06:23 AM

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம் நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து உற்சவர் பெருமாள் காலை 9:00 மணிக்கு கோவில் உள் புறப்பாடு நடந்தது. பின், அர்த்தமண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 6:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10:00 மணிக்கு கருட வாகனத்திலும், 12:00 மணிக்கு குதிரை வாகனத்திலும் மாட வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது.
மீண்டும் மதியம் 2:00 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4:00 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வீதியுலா நடந்தது.
விழாவை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி தலைவர் பராசக்தி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.