ADDED : ஜூலை 27, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கணவன், மனைவியை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் சந்தைமேட்டை சேர்ந்தவர் இளங்கோவன், 46; இவரது அண்ணன் தாஸ், 53;
இவர்களுக்குள் நிலம் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் இளங்கோவன் நிலத்தில் தாஸ் மாடு மேய்த்தார். அதை இளங்கோவன், அவரது மனைவி புஷ்பலதா, 41; ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தாஸ், இருவரையும் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தார்.
செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து தாைஸ கைது செய்து விசாரிக்கின்றனர்.