/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
/
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : நவ 03, 2024 11:00 PM
விழுப்புரம்:விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டின் பூட்டை உடைத்து, 8 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு சர்வேயர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன்,62; ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர், தனது மகன் திவாகரன், 40; என்பவருடன் வசித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக, 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது மகன் திவாகரன் மற்றும் குடும்பத்தினருடன் குற்றாலம் சுற்றுலா சென்றிருந்தனர்.
நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து 8 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து, திவாகரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரித்தனர்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.