/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து மழவந்தாங்கலில் சாலை மறியல்
ADDED : டிச 07, 2024 08:01 AM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. கடந்த 2 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மழவந்தாங்கல் - ஆலம்பூண்டி சாலையில் இன்று பிற்பகல் 2:10 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 2:30 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார் பழுதுநீக்கம் செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது.