ADDED : மே 01, 2025 05:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
விழுப்புரம் அரசு போக்கு வரத்து கழக அலுவலகத் தில், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. போக்கு வரத்துக் கழக பயிற்றுநர் சேகர், போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் பயிற்சி அளித்தனர்.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி, விபத்தில்லாத நிலை எட்ட வேண்டும். பஸ்களை சாலையோரம் உரிய நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்,
அதிவேக இயக்கத்தை தவிர்க்க வேண்டும், பேருந்து படியில் பயணிகள் நிற்பதை தவிர்க்க வேண்டும், உங்கள் உடல் நலனை பரி சோதித்து, உடற்தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

