sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை விக்கிரவாண்டியில் துணிகரம்

/

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை விக்கிரவாண்டியில் துணிகரம்

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை விக்கிரவாண்டியில் துணிகரம்

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை விக்கிரவாண்டியில் துணிகரம்


ADDED : ஏப் 04, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் குமார், 60; வாணவெடி தயாரிப்பாளர். இவர் அதே பகுதியில் பக்கத்து தெருவில் சில மாதங்களுக்கு முன் புது வீடு கட்டி வசித்து வருகிறார். பழைய வீட்டை வாரம் ஒரு முறை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை குமார் பழைய வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், கொள்ளை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக விக்கிரவாண்டியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us