sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு

/

பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு

பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு

பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.22 கோடி ஒதுக்கீடு


ADDED : மார் 15, 2025 08:50 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 22 கோடி ரூபாய் இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கு (நெல்-2) காப்பீடு செய்த 5,640 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 22.04 கோடி இழப்பீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 794 கிராம விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முதல்கட்டமாக சம்பா நெற்பயிருக்கு 165 கிராம விவசாயிகளுக்கு 22.04 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதர கிராமங்களுக்கு மகசூல் இழப்பு கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. பயிர் காப்பீடு செய்த மற்ற விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us