sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சியினர் மீதும் வழக்கு


ADDED : ஜன 09, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க., வினர் 150 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம், தமிழக கவர்னர் ரவியைக் கண்டித்து, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நகராட்சி திடலில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.,வினர் கலந்துகொண்டனர். இதனால், திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க.,வைச் சேர்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் வழக்கமாக ஆளும் கட்சியினர் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் மீது, வழக்கு பதியாத நிலையில், இந்தமுறை ஆளும் தி.மு.க., வினர் மீதும் வழக்கு போட்டுள்ளது, அரசியல் கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us