/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வாழ்வாதார இயக்க ஆலோசனைக் கூட்டம்
/
ஊரக வாழ்வாதார இயக்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 24, 2025 09:46 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விவரம் மற்றும் வங்கி கடனுதவிகள் குறித்தும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், அரசால் வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை மற்ற மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சுயஉதவிக்குழுவினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, தொழில் நிதி வல்லுநர் சம்பத் குமார், மாவட்ட செயல் அலுவலர் ராசாத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.