நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மே ல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்தி மாலை அணிதல், உலக நன்மை, அமைதி வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை மங்கள இசை, கோமாதா பூஜை, சக்தி கொடி ஏற்றம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு நடந்த கலச விளக்கு வேள்வி பூஜையை மண்டல பிரசார குழு செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது.

