ADDED : செப் 19, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே பைக்கில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார், நேற்று காவணிப்பாக்கம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக் மூலம் மூட்டையில் மணல் கடத்திய சித்தாத்துார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஞானவேல், 37; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.