ADDED : நவ 20, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சி.மெய்யூர் கிராம பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சத்தியராஜ், 25; ஞானவேல், 50; அண்ணாமலை, 55; தியாகசீலன், 54; ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வைத்திருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.