நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கி மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
ஆசிரியர் பயிற்றுனர் ஏழுமலை முன்னிலை வகித்து பேசினார். ஆசிரியர் சாந்தவேல் வரவேற்றார்.
தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்கள், ஆசரியர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.