ADDED : செப் 20, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வயிற்று வலியால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த சங்கீத மங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் மகள் தேவிபிரியா,17; அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த, 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்தவர், நேற்று முன்தினம் தனது நிலத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.