ADDED : ஜூலை 29, 2025 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது.

