sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'நிரந்தர வேளாண் உற்பத்திக்கு விதை பரிசோதனை அவசியம்'

/

'நிரந்தர வேளாண் உற்பத்திக்கு விதை பரிசோதனை அவசியம்'

'நிரந்தர வேளாண் உற்பத்திக்கு விதை பரிசோதனை அவசியம்'

'நிரந்தர வேளாண் உற்பத்திக்கு விதை பரிசோதனை அவசியம்'


ADDED : மார் 22, 2025 03:48 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிரந்தர வேளாண் உற்பத்திக்கு விதை பரிசோதனை அவசியம் என திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

வேளாண்மை உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். வேளாண்மையின் நிரந்தர உற்பத்தி, வளர்ச்சிக்கு விதைதான் அடிப்படை இடுபொருள். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்பு துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையம் செயல்படுகிறது.

விதையின் தரத்தை அறிய விதை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் முளைப்புத் திறன், புறத்துாய்மை, ஈரப்பதம், பிறரக கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் உழவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகிறது.

விவசாயிகள், விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களின் கைவசம் உள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு விதை மாதிரிக்கு 80 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், முதல் தளம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us