ADDED : செப் 18, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம், கவியரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாபு வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் சின்னதுரை நோக்கவுரையாற்றினார். ஆசிரியர் கோவிந்தராஜ், பேராசிரியர்கள் மணவாளன், சுவாமிநாதன், சுமதி வாழ்த்தி பேசினர். இதில், அண்ணாதுரை என்ற தலைப்பில் மாணவர்களின் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடந்தது.
பேராசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார்.