/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி
/
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி
ADDED : ஜூலை 09, 2024 05:22 PM

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி அடித்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் உள்ள அரசு செம்மண் குவாரியை, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது ஏலம் எடுத்து, அதில், விதிமீறி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 34 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 27 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜம கேந்திரன், கோபிநாத் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சியாக, ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் கோவில்மணி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவர், ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, உயர் அதிகாரிகள் கூறியதால் கோப்பில் கையெழுத்திட்டேன், எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி, அரசுக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தார். விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.