/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்
/
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்
ADDED : ஜன 24, 2025 06:44 AM

செஞ்சி: செஞ்சிக்கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் திருப்பதிக்கு நடைபயணம் புறப்பட்டு சென்றனர்.
செஞ்சி கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் 9ம் ஆண்டாக நேற்று திருப்பதிக்கு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். காலை 9 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்து பாதயாத்திரையை துவக்கினர்.
இவர்கள் சேத்துப்பட்டு, ஆரணி, ராணிப்பேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு, அலமேலுமங்காபுரம் வழியாக 6 நாட்கள் நடை பயணம் சென்று திருப்பதியை அடைய உள்ளனர். 28 ம் தேதி கீழ் திருப்பதியில் காலை 9 மணிக்கு படி பூஜையை துவக்கி மேல்திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து யாத்திரையை நிறைவு செய்கின்றனர். இவர்கள் பயணத்தின் போது தங்குவதற்கும், உணவு ஏற்பாடுகளையும் உபயதாரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.