sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை

/

வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை

வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை

வளைவு இன்றி சர்வீஸ் சாலை: பொதுமக்கள் கோரிக்கை


ADDED : பிப் 19, 2024 05:28 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் பகுதியில் விபத்துகளை தவிர்க்க வளைவுகள் இன்றி சர்வீஸ் சாலைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு நான்கு வழிச்சாலை அமைத்த போது முண்டியம்பாக்கம் கிராம பகுதியில் முறையாக கவனம் செலுத்தி சாலை அமைக்காததால், கிராமத்தின் முக்கிய பகுதியில் வளைவுடன் கூடிய சாலை அமைக்கப்பட்டது.

இதனால் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் வரும் போது எதிர் முனையில் பார்வை கிடைக்காததால் பஸ் நிறுத்தம் பகுதியிலும் , சர்க்கரை ஆலை ரோடு பிரியும் இடங்களிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக நகாய் சார்பில் சர்க்கரை ஆலைக்கு ரோடு பிரியும் இடத்தின் அருகிலிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே வரை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

மேம்பால பணிக்காக சாலையின் இருபுறமும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெட்ரோல் பங்க்கிற்கு செல்லும் வாகனங்கள், புதுச்சேரி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் எந்நேரமும் பயணிக்கும் பரபரப்பான சர்வீஸ் சாலையாக உள்ளது.

எனவே, சாலை விரிவாக்க பணியின் போது பைபாஸ் சாலையின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ள சர்வீஸ் சாலையை முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதி வரை சாலை வளைவுகளை நேர் செய்து வடக்கு பகுதியிலிருந்து சர்வீஸ் சாலையில் வருகின்ற வாகனங்கள் தெளிவாக தெரியும்படி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகாய் அதிகாரிகள், பொறியாளர்கள் உதவியுடன் சாலையை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us