sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சக்தி கரகம் ஊர்வலம்

/

சக்தி கரகம் ஊர்வலம்

சக்தி கரகம் ஊர்வலம்

சக்தி கரகம் ஊர்வலம்


ADDED : ஏப் 29, 2025 06:33 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. இதில் மாசி மாத அமாவாசை மாசி பெருவிழா நடக்கும் போதும், சித்திரை மாதமும் ஊஞ்சல் உற்சவம் நடப்பதில்லை.

சித்திரை மாதம் சக்தி கரகம் வீதி உலா நடக்கும். நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 1:00 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் சாமி வீதி உலா துவங்கியது. அங்காளம்மன், ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மேல்மலையனுாரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்ற சக்தி கரம் அதிகாலை கோவிலை அடைந்தது. அங்கு மங்கள ஆரத்தியுடன் பூசாரிகளும், பக்தர்களும் வரவேற்பு அளித்தனர். அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர். பள்ளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மேல்மலையனுாரில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us