/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது
/
உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது
ADDED : அக் 20, 2025 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பெட்டிக்கடையில் உரிமமின்றி நாட்டு பட்டாசு விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் தீவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், 55; என்பவர் தனது பெட்டிக்கடையில் உரிமமின்றி, 1000 நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.