ADDED : பிப் 17, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனத்தில் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.
மத்திய அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து, விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையொட்டி திண்டிவனம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.
நேரு வீதி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலுள்ள கடைகள், வர்த்த நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல திறந்திருந்தன.