/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
/
சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 10, 2025 11:39 PM

திண்டிவனம் : அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், சமூக நீதி தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

