sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பெற்ற தாய் அடித்து கொலை போதையில் மகன் வெறிச்செயல்

/

 பெற்ற தாய் அடித்து கொலை போதையில் மகன் வெறிச்செயல்

 பெற்ற தாய் அடித்து கொலை போதையில் மகன் வெறிச்செயல்

 பெற்ற தாய் அடித்து கொலை போதையில் மகன் வெறிச்செயல்

1


ADDED : நவ 25, 2025 05:49 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், பரனுாரைச் சேர்ந்தவர் கனகராஜ், 60. இவரது மனைவி விஜயலட்சுமி, 55. இவர்களின் மூத்த மகன் திருமணமாகி, சென்னையில் வசிக்கிறார். இளைய மகன் பிரகாஷ், 29, திருமணமாகி வீட்டிலேயே தங்கியுள்ளார்.

மது அருந்தும் பழக்கம் உடைய இவர், நேற்று முன்தினம் இரவு, தன் தந்தை கனகராஜிடம், தகராறு செய்து, தாக்கினார். தடுத்த தாய் விஜயலட்சுமியையும் கல், கையால் தாக்கினார்.

இதில் இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு விஜயலட்சுமி இறந்தார்; கனகராஜ் சிகிச்சை பெறுகிறார். அரகண்டநல்லுார் போலீசார், தாயை அடித்து கொன்ற மகன் பிரகாஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us