ADDED : அக் 16, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சுந்தர், 14; வளவனுார் அரசு மாதிரி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.